★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Sunday, January 3, 2021

தமிழக முதல்வர் எடப்பாடி அவர்களுடன் மறத்தமிழர் சேனை நிர்வாகிகள் சந்திப்பு

 

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அனைத்து சமுதாய மக்களின் கருத்துகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்து வருகிறார். அந்தவகையில் முக்குலத்தோர் சமுதாய மக்களின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை நேரில் கேட்பதற்காக 02.012021 அன்று மாலை 06.00 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தேவர் மகாலில் கூட்டம் நடைபெற்றது.

              கருத்துகேட்பு கூட்டத்திற்கு மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தலைமை வகித்தார். அ.இ.அ.தி.மு.க இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி அவர்கள் வரவேற்று பேசினார். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் மு.மணிகண்டன் அவர்கள் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் நி.சதன் பிரபாகர் அவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 மறத்தமிழர் சேனை சார்பாக மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன், மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆதி முத்துக்குமார பாண்டியன், மாநில இளைஞர் சேனை செயலாளர் சு.மணிகண்டன் தேவர், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் து.தினேஷ், மதுரை மாவட்ட தலைவர் ஆ.பாலமுருகன் தேவர், சென்னை மாவட்ட பொறுப்பாளர் ஸ்டான்லி ராஜபாண்டியன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் அரியூர் முத்துக்குமார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நினைவுப் பரிசாக இராமநாதபுரம் அரண்மனை போன்ற வடிவமைப்பை மறத்தமிழர் சேனை சார்பாக வழங்கினர். மாநில அமைப்பாளர் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்று கோரிக்கை மனுவை வழங்கினார்.

Monday, June 25, 2018

சசிவர்ண முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் 246 வது வீரவணக்க நாள் விழா


சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னர் சசிவர்ண முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் மற்றும் இளைய ராணி கெளரி நாச்சியார் ஆகியோரின் 246 வது நினைவு நாள் மற்றும் வீரவணக்க நாள் விழா 25.06.2018 அன்று காளையார்கோவில் மன்னர் மாலையீட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மாமன்னர் சசிவர்ண முத்துவடுக நாதத் தேவர் அவர்களது வீரத்தையும்; போர் திறனையும் புதிய தலைமுறையினர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மறத்தமிழர் சேனை இயக்கம் தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகிறது. மறத்தமிழர் சேனை மதுரை மாவட்ட நிர்வாகிகளின் சிறந்த செயல்பாட்டால் நான்கு மாதங்களுக்கு முன்பே சுவர் விளம்பரங்கள் மதுரை நகர் பகுதிகளுக்குள் எழுதப்பட்டிருந்தன. அதேபோல 246 வது நினைவு நாளை முன்னிட்டு தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளால் சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டு இருந்தன. காளையார்கோவில் நகருக்குள் வருவதற்கான அனைத்து சாலைகளிலும் இளையான்குடி ஒன்றிய நிர்வாகிகள் திட்டமிட்டு அனைத்து மாவட்டங்களின் சுவரொட்டிகளையும் ஒட்டி பெருங்கவனத்தை ஏற்படுத்தியிருந்தனர்.


சிவகங்கை சீமை மாமன்னர் முத்துவடுகநாதத் தேவர் அவர்களின் 246 வது நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்துவதற்காக சிவகங்கை சீமை வருகைதந்த மாநில, மாவட்ட மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகளை கொல்லங்குடி காளி கோவில் வளைவு அருகில் காளையார்கோவில், இளையான்குடி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நாற்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் மறத்தமிழர் சேனை கொடி ஏந்தி தொண்டர்கள் முன் செல்ல வாகனப்பேரணியாக காளையார்கோவில் வந்தடைந்தனர். வீரப்பேரரசர் முத்துவடுகநாதத்தேவர் அறக்கட்டளை சார்பில் கோபால்துரை அவர்களும் சகா.மணிமுத்து அவர்களும் மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை மேளதாளம் இசைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.


மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களது தலைமையில் ஆலோசகர் வீ.கா.இராமசாமித்தேவர் அவர்கள், மாநில துணை பொதுச் செயலாளர் மு.முத்துக்குமார் அவர்கள், மதுரை மாவட்ட செயலாளர் து.தினேஷ் அவர்கள், மதுரை மாவட்ட தலைவர் மணிகண்டன் அவர்கள், மதுரை மாவட்ட பொருளாளர் திருப்பதி அவர்கள், மதுரை மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் கி.உலகநாதன் அவர்கள், மதுரை தெற்கு தொகுதி இளைஞர் சேனை செயலாளர் பூ.வாலகிருஷ்ணன் அவர்கள், மதுரை மத்திய தொகுதி இளைஞர் சேனை செயலாளர் பா.சதீஸ்குமார் அவர்கள், போடி ஒன்றிய பொறுப்பாளர் பால்பாண்டி அவர்கள், தேனி மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் அருள்ராஜ் அவர்கள், பரமக்குடி ஒன்றிய செயலாளர் வ.முருகன் அவர்கள்,  பி.பி.குளம் கிளை செயலாளர் ர.கார்த்திக் அவர்கள், சிம்மக்கல் பகுதி சேனை பொறுப்பாளர்கள் ச.மனோஜ்குமார் அவர்கள், காளிபிரகாஷ் அவர்கள், பழங்காநத்தம் பகுதி இளைஞர் சேனை நிர்வாகி விவேக் அவர்கள், சிவகங்கை மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் அரவிந்த் அவர்கள், சிவகங்கை மாவட்ட மாணவர் சேனை செயலாளர் மா.வசந்த் அவர்கள், இளையான்குடி ஒன்றிய தலைவர் நா.திருமுருகன் அவர்கள், இளையான்குடி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப சேனை செயலாளர் தடியச்சாமி அவர்கள், இளையான்குடி ஒன்றிய துணை தகவல் தொழில்நுட்ப சேனை செயலாளர் ச.முருகானந்தம் அவர்கள் மற்றும் முரளி தேவன், வழக்கறிஞர் அடைக்கலம், ரகுவீர பாண்டியன், கஜேந்திரபாண்டியன்  உள்ளிட்ட பெருந்திரளான நிர்வாகிகள், உறுப்பினர்கள் மாமன்னர் முத்துவடுகநாத தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.


இளைய ராணி கெளரி நாச்சியார் நினைவிடத்திலும், காளையார்கோவில் ஆலத்தியத்திற்குள் இருக்கும் முத்துவடுகநாதத் தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து புகழ்வணக்க முழக்கம் எழுப்பப்பட்டது. மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்களுக்கு அறக்கட்டளை மூத்த நிர்வாகி உருவாட்டி பொன்னுசாமித்தேவர் அவர்கள் விழாக்குழுவின் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Wednesday, June 20, 2018

மாமன்னர் முத்துவடுகநாததேவர் 246 வது வீரவணக்க நாள் விழா - சிவகங்கை மாவட்டம்


மாமன்னர் முத்துவடுகநாததேவர் 246 வது வீரவணக்க நாள் விழா - தேனி மாவட்டம்


மாமன்னர் முத்துவடுகநாததேவர் 246 வது வீரவணக்க நாள் விழா


சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னர் சசிவர்ண முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் மற்றும் இளைய ராணி கெளரி நாச்சியார் ஆகியோரின் 246 வது நினைவு நாள் மற்றும் வீரவணக்க நாள் விழா ஜூன் - 25 - 2018 அன்று காளையார்கோவில் மன்னர் மாலையீட்டில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாதத் தேவரின் வீரத்தையும்; போர் திறனையும் புதிய தலைமுறையினர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மறத்தமிழர் சேனை இயக்கம் களப்பணி ஆற்றி வருகிறது. குறிப்பாக, ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி, பொன்.பாண்டித்துரை தேவர், வேலு நாச்சியார், கீழத்தூவல் தியாகிகள் ஐவர், மன்னர் பாஸ்கர சேதுபதி, மாமன்னர் பூலித்தேவர் போன்ற மாபெரும் சமூக ஆளுமைகள் குறித்த விவாதங்களை கிளப்பி வெகுஜன கவனிப்பை ஏற்படுத்தியிருக்கிறோம்.

அதே சம முக்கியத்துவத்தோடு கடந்த சில வருடங்களாக திட்டமிட்டு உழைத்து வருகிறோம். சிவகங்கை சீமை அரசாண்ட மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர் அவர்கள் குறித்த விவாதத்தை கிளப்பும் நோக்கில் சுவர் விளம்பரங்கள் மறத்தமிழர் சேனை மதுரை மாவட்ட நிர்வாகிகளின் சிறந்த செயல்பாட்டால் நடைபெற்றது. தற்பொழுது 246 வது நினைவு நாளை முன்னிட்டு தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளால் சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டு உள்ளன. அவற்றில் வெகுமக்கள் கவனம் ஈர்த்த சிலவற்றை காணலாம்.


Friday, April 13, 2018

வைகை நதி மக்கள் இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்


வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் வைகையாற்றில் கழிவு நீர் கலப்பதை கண்டித்தும், நிலத்தடி நீரை பாதுகாக்க வலியுறுத்தியும் 07.04.2018 அன்று மாலை 05.00 மணியளவில் மதுரை பேச்சியம்மன் படித்துரை ஆறுமுகசந்தி திலகர் திடல் சந்தை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வைகை நதி மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன், மாநில துணை பொதுச்செயலாளர் மு.முத்துக்குமார், மதுரை மாவட்ட தலைவர் சு.மணிகண்ட தேவர், மதுரை மாவட்ட ஆலோசகர் அ.கி.கணேசத்தேவர், மதசார்பற்ற ஜனதாதளம் மாநில பொதுச்செயலாளர் க.ஜான்மோசஸ், மக்கள் சட்ட உரிமை இயக்கம் தலைவர் ப.அண்ணாதுரை, நவீன நீர்வழிச்சாலை தலைவர் ஏ.சி.காமராஜ், வைகை டிரஸ்ட் நிறுவனர் அண்ணாதுரை, இந்து இளைஞர் சேனா மாநில தலைவர் எம்.சோலைக்கண்ணன், இந்து இளைஞர் சேனா மாநில அமைப்பாளர் கே.ரவிக்குமார், நம்மாழ்வார் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்.சித்தன், இயற்கை ஆர்வலர் வழக்கறிஞர் இ.த.சீமான் மற்றும் பல்வேறு இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக மதுரை கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் இல.அமுதன் வரவேற்புரை ஆற்றிட வைகை நதி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் எம்.மணிகண்டன் நன்றியுரை ஆற்றினார்.

Thursday, April 12, 2018

mukkulathor logo

mukkulathor logo / moovendar logo / kallar / maravar / agamudayar / maruthu pandiyar / thevar